August 31, 2008

புது தொடக்கம் (Clean Slate)

 
இது அனேகமாக எனது இருநூறாவது புது தொடக்கமாக இருக்க வேண்டும். இருந்தாலூம் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன், வேதாளைத்தினை முருங்கை மரத்தினில் இருந்து எடுத்து கொண்டு சற்று வேகமாகவே நடக்க ஆரம்பித்தான்.

புது தொடக்கங்களில் நேற்று என்பதற்கு பெரிய அர்த்தம் இல்லை. ஒரு பாடம் என்பதை தவிர. இன்று கையில் உள்ள பொருள்கள் மட்டுமே கணக்கு. இன்று என்று பார்க்கும் போது நான் சாப்பாடு பழக்கங்களை சற்று கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். சாப்பாடு விஷயத்தில் வாழைப் பழ தோட்டத்தில் புகுந்த யானை போல் இருக்கின்றேன். லீலா சமையல் பண்ணும் போது எல்லாம் சாப்பிடுவது வரம்பு மீறி விடுகிறது. பழைய படி சமையல்கார அம்மாவையே சமையல் செய்ய சொல்ல வேண்டும்.

செப்டம்பரை பிள்ளையார் சுழி போட்டு ஸ்டார்ஸ் கணக்கு தொடங்க வேண்டும். எத்தனை தடவை சாமி ஆடினாலும், ஏன் தான் எனக்கு புத்தி வர மாட்டேங்குதோ? பைத்தியம் ஏன் பிடிக்கின்றது? ம்ம்ம்ம் விக்கிரமாதித்தன் போலே மீண்டும் தொடர வேண்டியது தான்.


நாளை ஒரு புதிய நாள் .

No comments:

Post a Comment